ஞாயிறு, 28 ஜூன், 2009

வால்மீகி விமர்சனம்

Jun 26, 2009

என்னடா "வால்மீகி" நீ இன்னா பண்ண போற..?

விகடன் டாக்கிஸொட ரெண்டாவது படமுங்க.., ஊருக்கெல்லாம் மார்க்கு போட்டு வயித்தெரிச்சலகெளப்புனவங்க, இனிமே சினிமா பக்கமே தலவெச்சி படுக்க மாட்டாங்கன்னு நெனக்கிறேன்.

எத்தன படம் பாத்திருக்கோ..,திருடிட்டு மாமியார் (ஜெயிலுக்கு) ஊட்டுக்கு போற ஹீரோவா அகில் வர்றாரு.அட அதாங்க அந்த கல்லுரி படத்துல நடிச்சாரே அவருதான். அவங்கள மீரா நந்தன் அப்புறம் இன்னொரு பொண்ணு தேவிகா ரெண்டு பேரும் லவ் பண்றாங்க, ஆனா நம்ம ஹீரோ மீராவ மட்டுந்தான் லவ் பன்றாரு. ஆனாலும் அவரோட லவ்வுக்கு தடையா இருக்குறதே அந்த திருட்டு தொழில் தான். அவரால அத விட முடியல, எல்லாரையும் மாத்தி நல்ல வழிக்கு கொண்டு வர்ற மீரா நம்ம ஹீரோ அகிலையும் எப்பிடியாவது மாத்தி கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறாங்க,அவரோட ஆச நிறைவேரிச்சா, இல்லையாங்குறது தான் படத்தோட கிளைமாக்ஸ்.

ஹீரோ அகில் ரொம்ப பொருத்தமான ஆள்தான். என்ன கத நடக்குற இடம் எல்லாமே ஸ்லம் ஏரியாதான். அவரோட முகம் அதுக்கு பொருத்தமா இருக்கு.

அப்புறம் புதுப்பொண்ணு மீராநந்தன், பொண்ணு ரொம்ப சோக்கா நடிக்குது. ஆனான் கவர்ச்சி காட்டுனா கண்டிப்பா தாக்கு பிடிக்கலாம். இன்னொரு பொண்ணு தேவிகா நல்ல கும்முன்னு மூட கெளப்புற பொண்ணு, அட நடிப்புல பிச்சி உதருதுங்க,

பைத்தியக்காரனா வர்ற படவா கோபி இந்த படத்துல நடிக்க சான்ஸ் கிடச்ச உடனே "காதல்" படத்த திரும்ப திரும்ப போட்டு பாத்துருப்பார்னு நெனைக்கிறேன்.என்னாமா அப்பிடியே பரத் டிட்டோவா ஆக்டு குடுத்துருக்குராரு.

அப்புறம் படத்துல பெருசா ஆளுங்கெல்லாம் கிடையாது.

அழகப்பனோட கேமரா முக்கால்வாசி படத்த இருட்டா தான் காட்டுது. இப்பிடி இருட்டுல எடுத்தா அது மணிரத்னம் படமாயிடுமா? என்ன?

முக்கிய சொல்ல வேண்டியது இளையராஜாவோட மியூசிக், அய்யா தோர தயவு செஞ்சி நீங்க வீட்ல ரெஸ்ட் எடுங்கோ, திரும்ப, திரும்ப போட்ட ட்யுனையே போட்டு எங்க உசுர எடுக்காதீங்க? அப்புறம் என்னங்க? ஒரு பாட்டு கூட மனசுல நிக்க மாட்டேன்கிது.

படத்தோட டைரக்டர் புது ஆளு ஜி.அனந்த நாராயணன், ஆளு பேச ஆரம்பிச்சா ரெண்டு மணி நேரத்துக்கு கம்மியா பேசவே மாட்டாரு, ஆனா படத்துல எதுவுமே இல்ல மேட்டரு...

ஒரு நாலஞ்சி தடவ இந்த படத்த பாத்தீங்கன்னா? கண்டிப்பா மெட்ராஸ் பாஷைய ஈஸியா கத்துக்கலாம்.அந்தளவுக்கு "நாஸ்தா துன்னியா" "இன்னாப்பா எப்டி கீர" இப்டி படம் முழுக்க ஒரே "ஸ்லம் ஏரியா" பாஷ தான்.அதுக்கு ஏத்த மாதிரி காட்டுற ஏரியாக்களும் மூக்க பொத்த வைக்கற ஏரியாக்கள்.அதனாலோ என்னவோ கூவத்துக்கு நடுவுல உக்காந்து படம்பாக்குற "பீலிங்" வருது.

படத்துல, "என்னடா பாண்டி என்ன பண்ண போற" ன்னு ஒரு பாட்டு இருக்கு,அத கேக்குறப்போ போட்ட துட்டாவது வருமா? பாவம் இந்த படத்தோட தயாரிப்பாளர் என்ன பண்ண போறாரோ? ன்னு நம்ம மனசு ரொம்ப 'பீல்' பண்ணுதுங்க.

சீரியல் எடுத்து சம்பாதிச்ச பணத்த சினிமாவுல உட்டுட்டு போற கம்பெனி லிஸ்ட்ல விகடன் நிறுவனமும் சேர்ந்திடும்னு நெனைக்கிறேன்.இப்பவும் கெட்டுப்போகல இதோட உங்க ஆட்டத்த நிறுத்திக்கங்க...

பின்குறிப்பு : அது சரி அந்த "நூறு மார்க்கு" கதைய படமா எடுப்பீங்களா?இல்லியா?

வெள்ளி, 26 ஜூன், 2009

மாதம் மூன்று குறள்


எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு.

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு.

CableSankar: நாடோடிகள் - திரைவிமர்ச்னம்

CableSankar: நாடோடிகள் - திரைவிமர்ச்னம்

இதையும் கொஞ்சம் பாருங்கோ சும்மா தமாஷ் இல்ல சீரியஸ்

என்ன கருமத்தை தின்னு தொலைச்ச கம்முனாட்டி இந்த நாத்தம் நாறுது ஐயோ !
முடியல...................................................................... உட்கார

என் முகத்தை க்ளோஸ் அப்ல சகிச்சுகிட்டு பாக்குற உங்களுக்கு ..................................



வாய பெல்ட்டால கட்டிபுட்டானுகளே படுபாவி பசங்க கத்த கூட முடியாம பண்ணிடிங்கலேடா



இதுங்க ரெண்டும் இரட்டை பிறவிகலாம்
இதை எல்லாம் பொறுமையாய் பார்த்த உங்களுக்கு கோவில் கட்டி கும்பிட முடியாது அந்த அளவுக்கு காசு இல்லப்பா!

ஒட்டு போட்ருங்கோ


ரொம்ப ஆட கூடாது

நண்பர்களே இந்த காட்சியை பார்த்து விட்டு மறக்காமல் ஒட்டு போட்ருங்கோ

விஜய் ரசிகர்கள் வலைத்தளம்


http://vijaynet.com/

துல்லியமான புகைப்படங்கள்




















ரீமாசென்னிடம் சிக்கி தவித்தேன்; கார்த்தி ருசிகர பேட்டி

ரீமாசென்னிடம் சிக்கி தவித்தேன்; கார்த்தி ருசிகர பேட்டி
பருத்திவீரன் கார்த்தியின் 2-வது படம் “ஆயிரத்தில் ஒருவன்”. 2 வருடங்களுக்கு மேலாக டைரக்டர் செல்வராவன் செதுக்கியுள்ள இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. பட அனுபவம் குறித்து கார்த்தி கூறியதாவது:-

டைரக்டர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதையை சொன்னார்.
எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் உடனே சம்மதித்தேன். நான் நினைத்ததை போல இப்படம் பெரிய பட்ஜெட் படம்தான் என்றாலும் இவ்வளவு பட்ஜெட் ஆகும் என நினைக்கவில்லை. ரூ.15 கோடி பட்ஜெட் திட்டமிட்டோம். ஆனால் கடைசியில் ரூ.32 கோடி ஆகிவிட்டது. இதற்கு தயாரிப்பாளருக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
இப்படத்தை ஆக்சன் படம், ரொமான்ஸ் படம், வரலாற்று கால படம் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. இயற்கையையும், மனிதர்களையும் பற்றியது தான் இந்த படம். இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அளைவருக்கும் பிடிக்கக் கூடிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
செல்வராகவன் திரைக்கதையில் நிறைய மேஜிக் செய்திருக்கார். படத்திற்காக கேரள வனத்துறை அனுமதி பெற்று சாலக்குடியில் சூட்டிங் நடத்தினோம். இரவு, பகலாக காட்டில் தங்கினோம். அதுபோல ஒரிசாவில் உள்ள புளோரா மற்றும் பவுனா காட்டில் மட்டும் 45 நாட்கள் தங்கினோம். இது ராஜநாகம், கொடிய விஷ பாம்புகள் அதிகமுள்ள பகுதி. அங்கு மிகவும் ரிஸ்க் எடுத்துதான் காட்சிகளை படமாக்கினோம்.
ரீமாசென், ஆன்ட்ரியா என 2 பேர் இருந்தாலும் எனக்கு யாரும் ஜோடி கிடையாது. ஆனால் அவர்களுடன் டூயட் ஆடுவேன். ஆன்ட்ரியாவுக்கு தமிழில் இது 2-வது படம். தொல்பொருள் ஆராய்ச்சியாளராக நடித்திருக்கிறார். ரீமாசென் ஸ்டிரிக்டான அதிகாரியாகவும், பார்த்திபன் அரசராகவும் நடித்திருக்கிறார்கள்.
படத்தின் முதல் பாதி முழுவதும் நான் சென்னை குப்பத்து இளைஞன் போல லோக்கல் தமிழ் பேசி நடித்துள்ளேன். முதல் பாதி முழுவதும் மிகவும் ஜாலியாக இருக்கும். 2-வது பாதியில் தான் பார்த்திபன் வருவார். அவரிடம் இருந்து இந்த படத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். சூட்டிங் இடைவெளியில் ரீமாசென், ஆன்ட்ரியாவிடம் தூண்டிலில் சிக்கிய மீன் போல சிக்கி கொண்டேன். பெண்கள் கல்லூரிக்குள் தனியாக ஒரு பையன் சென்றால் என்ன பாடுபாடுவானோ அது போலத்தான் நானும் தவித்தேன். அவ்வப்போது செல்வராகவன் தான் என்னை காப்பாற்றுவார். மிகவும் ஜாலியாக இருந்த இந்த அனுபவங்களை வாழ்நாளில் மறக்கவே முடியாது.

அரசியலில் இப்போது ஈடுபடமாட்டேன்; நடிகர் விஜய் பேட்டி

பிறந்தநாளையொட்டி நடிகர் விஜய் வடபழனி ஜே.எஸ்.கல்யாண மண்டபத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி: உங்கள் பிறந்த நாள் விருப்பம் என்ன?
பதில்: ஒவ்வொரு பிறந்தநாளிலும் ஏழைகளுக்கு உதவிகள் செய்து வருகிறேன். ஏழை மாணவ- மாணவிகளுக்காக இலவச கம்ப்ïட்டர் பயிற்சி மையங்கள் துவக்க விரும்பினேன். அதை இந்த பிறந்தநாளில் நிறைவேற்றி இருக்கிறேன். இரண்டு பயிற்சிமையம் திறந்துள்ளÚன். இந்த எண்ணிக்கை மேலும் உயரும். இலவச மருத்துவ முகாம், ரத்ததான முகாமும் இன்று நடத்தப்பட்டது. உணவும் வழங்கப்பட்டது.
கே: ரசிகர்களை அழைத்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி உள்ளீர்களே? அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமா?
பதில்: ரசிகர்களிடம் கருத்து கேட்டது உண்மை தான். பொதுமக்கள் பெண்கள் என எல்லோரிடமும் அபிப்பிராயம் கேட்டோம். அரசியலில் ஈடுபட்டு மக்கள் பணிகளில் ஈடுபடலாம் என்று எல்லோரும் தெரிவித்தனர். அவர்கள் கருத்தை நான் ஒதுக்கவில்லை. ஆனாலும் அரசியலில் இப்போதைக்கு ஈடுபடும் யோசனை எதுவும் இல்லை.
கே: ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி உள்ளீர்களே? மிரட்டல் வந்ததா?
ப: மிரட்டல் ஏதும் வரவில்லை. மிரட்டல் வரும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. அப்படி வந்தாலும் பயப்படமாட்டேன்.
கே: மக்கள் இயக்கமாக மாற்றுவதால் ரசிகர்கள் தொண்டர்களாக மாறவேண்டி வருமே?
ப: என் ரசிகர்கள் எப்போதோ தொண்டர்களாகி விட்டார்கள்.
கே: வேட்டைக்காரன் படம் எப்போது ரிலீசாகும்?
ப: 70 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து விட்டது. தீபாவளிக்கு ரிலீசாகும்.
கே: 50-வது படம் முடிவாகிவிட்டதா?
ப: எனது 50-வது படத்தை சங்கிலி முருகன் தயாரிக்கிறார். டைரக்டர் முவடிவாகவில்லை.

இவ்வாறு விஜய் கூறினார்.

மாயாண்டி குடும்பத்தார்

மாயாண்டி குடும்பத்தார்வெள்ளிக்கிழமை, ஜூன் 19, 9:54 AM
குடும்பங்களின் பாசம், பகை கூடிய உணர்வு பூர்வ கதை...
மேட்டுப்பட்டி கிராமத்தில் வசிக்கும் அண்ணன் தம்பிகள் ஜி.எம். குமார், மணி வண்ணன். இருவருக்கும் குடும்ப சொத்தை பிரிப்பதில் பகை.அண்ணனுடன் தகராறு வேண்டாம் என மணி வண்ணன் ஒதுங்கி வாழ்கிறார். இருவரின் மகன்களும் அவ்வப்போது அடித்துக் கொள்கிறார்கள்.
மணிவண்ணன் கடைசி மகன் தருண்கோபி மேல் அண்ணன்களுக்கு அளவு கடந்த பாசம். அவருக்கும் சக மாணவி பூங்கொடிக்கும் காதல். இடையில் மணி வண்ணன் மின்சாரத்தில் அடிபட்டு சாக தருண் கோபி நிர்கதியாகிறார். அண்ணன் மனைவிகள் சாப்பாடு போடாமல் ஒதுக்குகின்றனர். காதலியும் பிரிகிறாள். கிளைமாக்சில் அத்தை மகளை மணக்க முடிவு செய்கிறார். இதனால் குமார் மகன்களுடன் சண்டை வலுக்கிறது. குடும்பத்தினர் சேர்ந்தார்களா என்பது கிளைமாக்ஸ்.
கிராமத்தின் உயிரோட்டமான கேரக்டர்களை உணர்வு பூர்வமாக செதுக்கி திரையில் வடித்துள்ளார் இயக்குனர் ராசு மதுரவன்.
மணிவண்ணன், மகன்களாக பாசப்பிள்ளைகளாக வரும் பொன்வண்ணன், சீமான், ஜெகன்நாத், தருண்கோபி மனதில் நிற்கின்றனர். வலிய சண்டைக்கு வரும் பெரியப்பா குடும்பத்தினரை எதிர்க்கும் போதும், அன்பான குடும்பம் நடத்தும் போதும் மனதில் இறங்குகின்றனர்.
தருண் கோபி நடிப்பில் ஸ்கோர் பண்ணுகிறார். பூங்கொடியுடன் காதல் வயப்படுவது கிராமிய கவிதை... அப்பா இறந்ததும் பிரிவு தாங்காமல் அழுது தியேட்டரையே அழ வைக்கிறார். மதினிகள் சித்ரவதையை குடும்ப ஒற்றுமைக்காக தாங்கிக் கொண்டு தனியாக சமைத்து சாப்பிடுகையில் மனதை பிழிகிறார்.
காதலியை தேடி போவது, அவள் தனது வீட்டுக்கு வரும் போது பழைய சினிமா பாடலை போட்டு வரவேற்பது கலகலப்பு. பெரியப்பா மகன்களுடன் சண்டையிடுவதில் வேகம்.. கிளைமாக்சில் பகையாளி என பாராமல் எங்களுக்கு நீங்கதான் பெரியப்பா ஆதரவு என ஜி.எம்.குமார் காலில் விழுந்து அழுது குடும்பத்தை ஒன்று சேர்த்து விழிகளில் நீர் முட்ட வைக்கிறார்.
அண்ணன்களாக வரும் சீமான், பொன்வண்ணன் தம்பியை வெறுக்கும் மனைவிகளுக்கு அறைவிடுவது, தருண் கோபி சமைத்த உணவை சாப்பிடுவது சகோதர பாசத்தின் உச்சம்.
காதல் தோல்வியில் வசந்த ஊஞ்சலிலே பாடல் போட்டு சோகம் காட்டும் ஜெகன்நாத், சாப்பாட்டு ராமனாகவும் அப்பா நீ செத்த பிறகு இந்த செருப்பும் கட்டிலும் எனக்குத்தான் எனவும் சொல்லி குழந்தைத்தனமாக வலம் வரும் சிங்கம்புலி, தருண்கோபியை உயர்படிப்பு படிக்க வைக்க ஏங்கும் மணி வண்ணன், சதா முறைப்பு காட்டி திரியும் ஜி.எம்.குமார் ரவிமரியா, நந்தா பெரியசாமி போன்றோர் கேரக்டர்களும் அழுத்தம் பதிக்கின்றன. அக்காள் வீட்டில் தின்ன வந்துட்டான் என முணு முணுக்கும் ராஜ்கபூர் வார்த்தையில் இடிந்து போய் ஐம்பதாயிரம் ரூபாய் மொய் எழுதி விட்டு தருண் கோபி கோபமாக திரும்புவதும் அவரின் பாசத்தில் நெகிழ்ந்து தம்பி தம்பி என நெஞ்சில் அடித்துக்கொண்டு ஓடி வரும் அக்காவும் மனதை விட்டு அகலாதவை.
மதிப்பீடு செய்க
1/5 Bad2/5 Satisfactory3/5 Good4/5 very Good4/5 Excellent